Surprise Me!

தீக்குளிப்பு சம்பவம்! மூன்று பேர் கைது-வீடியோ

2017-10-24 4,041 Dailymotion

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். <br />தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்தவராவர். காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். <br />தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளித்தனர். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். <br />சிலர் வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மனிதாபிமானமுள்ள பலர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும், தீ குளித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். <br /> <br />100 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் குழந்தைகள் மதி சரண்யா,அட்சயா பரணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். <br /> <br />3 persons arrested after 3 person passed away by $elf-imm0lation in Nellai collector office on Monday. <br />

Buy Now on CodeCanyon