ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார். இதனால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. <br />சேலம் மாவட்டத்தின் 171 ஆவது கலெக்டராக ரோகினி ராம்தாஸ் கடந்த ஆகஸ்ட்டு மாதம் பதவியேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆவார். <br /> <br />ரோகினி, 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மணல்திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிபிடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.சப் கலெக்டராக இருந்தபோதே கெத்து காட்டிய ரோகினி சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து பின்னி பெடலெடுத்து வருகிறார். <br /> <br />சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி கிலியை கிளப்பினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிகை எடுப்பதாக உறுதியளித்தார் ஆட்சியர் ரோகினி. <br /> <br />Salem Collector Rohini getting more respect from public. Collector Rohini acting fastly on public issue.