இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது. <br />அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே இந்தத் தொடரை வெல்லும் <br /> <br />இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால், போட்டி மிகவும் கடினமாகவே இருக்கும். அதுவும் ராஜ்கோட்டில் கோலின் முன்ரோ, 59 பந்துகளில் 109 ரன்கள் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். <br /> <br />India, New Zealand T20 series decider today, Toss delayed due to rain <br />