ஜெயலலிதா சிகிச்சை சிடி இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் கொளுத்திப் போட்ட ஃபேஸ்புக் பதிவால் இப்போது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறது என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். <br /> <br />திவாகரனும் தினகரனும் ராசியாகிவிட்டோம் என என்னதான் கூறிவந்தாலும் இருதரப்புக்குமான புகைச்சல் குறைந்தபாடில்லை. இப்போது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 355 பேர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கி உள்ளனர். <br />குறிப்பாக இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் 5 நாட்களாக வருமானவரித்துறையின் பிடியில் உள்ளனர். திவாகரனின் கல்லூரியிலும் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. <br /> <br />வருமான வரித்துறை வட்டாரங்களோ, போலி நிறுவனங்களின் பெயரில் கருப்புப் பண பரிமாற்றம் நடந்தது என்பதால்தான் இந்த சோதனை என்கிறது. ஆனால் தினகரன் தரப்போ, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியைத்தான் தேடுகிறார்கள் என்கிறது. <br /> <br />TTV Dinakaran supporters disappointed over Sasikala Brother Divakaran's son Jeyananth for his facebook post on Jayalalithaa treatemetn video <br />