வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. <br />தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டியது. <br />சென்னையில் ஒருவாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. அதிகளவாக சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது <br /> <br />இதனால் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. <br />சென்னைக்கு குடிநீடி கொடுக்கும் ஏரிகளும் நிரம்பியது. இதனால் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை முடிவுக்கு வந்தது. <br />இந்நிலையில் சென்னையில் தனியார் நிலத்தடி நீர் ஆய்வு அமைப்பு ஆய்வு செய்தது. அதில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது <br /> <br />The Chennai ground water level has increased in many places of the city due to north east monsoon. Mayilapore, T Nagar area ground water level has increased upto 10 feet <br />