இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் மந்தமாக விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்தன. <br />லட்சுமணன், அகர்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் டோனியை கடுமையாக காடினர். 20 ஓவர் அணியில் இருந்து டோனியை நீக்க வேண்டும். அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். <br /> <br />ஆனால் டோனிக்கு கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். <br />கோலி கூறுகையில், இந்திய அணியில் டோனி முக்கியமான வீரர். அவர் அணிக்கு தேவை. அவரை பற்றிய விமர்சனங்கள் தேவையற்றது என்று கூறினார். <br />விராட் கோலி அற்புதமான கேப்டன். ஓய்வு அறையில் அவர் வீரர்களுடன் என்ன பேசுவார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் வீரர்களுடன் அவர் பழகும் விதம் சிறப்பானது. சாம்பியன் வீரரான டோனிக்கு ஆதரவு அளிக்கும் கோலியின் செயல்பாடு அற்புதமானது. <br /> <br />Ganguly praised Virat Kohli for supporting dhoni <br />