மைசூரைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற 85 வயது பிச்சை எடுக்கும் பாட்டி, தான் தினசரி பிச்சை எடுக்கும் கோவிலுக்கே ரூ. 2.5 லட்சம் தானமாக கொடுத்து அனைவரின் மூக்கிலும் விரலை வைக்கச் செய்துள்ளார். <br />வொன்டிக்கொப்பல் என்ற இடத்தில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில் முன்புதான் சீதாலட்சுமி தினசரி பிச்சை எடுப்பது வழக்கம். <br />பிச்சை எடுக்கும் பணத்தில் தனக்குப் போக மீதமுள்ள பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளார் சீதாலட்சுமி பாட்டி. அந்தப் பணத்தைத்தான் தற்போது கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பத்து வருட கால சேமிப்பாம் இது. <br /> <br />முன்பு இவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். ஆனால் வயோதிகம் அதிலிருந்து அவரை முடக்கி விட்டது. இதையடுத்து பிச்சை எடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்க ஆரம்பித்தார். கடந்த பத்து வருடமாக பிச்சை எடுத்து வருகிறார். <br /> <br />MV Sitalakshmi, 85, a beggar from cultural city, who donated a sum of 2.5 lakhs to Prasanna Anjaneya Swamy Temple, Vontikoppal. It was the money that she had earned over a decade's through begging <br />