உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவ தளபதி ராட்கோ மிலாடிசுக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், நீதிபதியை பார்த்து கெட்ட வார்த்தையில் அவர் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். 74 வயதாகும் அவர் மீது 1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாக மொத்தம் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். 2011ல் ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்ட நிலையில் 'த ஹேக்கில்' அமைக்கப்பட்ட 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. <br /> <br />நீதிபதி அல்போன்ஸ் ஒரியே நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது ராடிக் மிலாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். நீதிமன்றத்திற்குள் வந்ததும், இரு கைகளின் கட்டை விரல்களை காண்பித்து, புன்னகைத்தார் மிலாடிச். நீதிமன்றத்தில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் இதை பார்த்து பெரும் கோபம் கொண்டது அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது. <br /> <br />சிரித்தபடியே தீர்ப்பை எதிர்கொண்டார் மிலாடிச். ஆனால், நீதிபதி அல்போன்ஸ் ஒரியே தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும், கோபமடைந்தார் மிலாடிச். தீர்ப்பின் நடுவே "பொய்.. பொய்.." என கத்தினார். அவரை அமைதிகாக்க நீதிபதி வலியுறுத்தினார். <br /> <br />The verdict was disrupted for more than half an hour when Mladić asked the judges for a bathroom break.
