பிரதமர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என தொழில்நிறுவனங்களை மிரட்டுகிறீர்கள்; அவர்களோ மேற்கு வங்கத்தை விட்டு நாங்கள் போக முடியாது என அடம் பிடிக்கிறார். ஏனெனில் அவர்களது தொழில் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கான தொழில்துறை திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் தராமல் இருக்கிறீர்கள்? <br /> <br />பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல. இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படுவதை இந்த நாட்டின் நிதி அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை. <br /> <br />நீங்கள் என்ன துக்ளக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதம் 12% அதிகரித்துள்ளது. <br /> <br /> <br /> West Bengal Chief Minister Mamata Banerjee on Friday lashed out at Prime Minister Narendra Modi. <br />