மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெயலலிதா மிகவும் கோபமடைந்தார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். <br />ஜெயலலிதாவின் மகள் தாம் தான பெங்களூரு அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே அம்ருதா, ஜெயலலிதாவை பெரியம்மா என கூறிவந்தார். <br />திடீரென தாமே ஜெயலலிதாவின் மகள் என கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்றமோ, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அம்ருதாவுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் அந்த குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபுதான் என்றும் அவரது அத்தை மகள் லலிதா திட்டவட்டமாக கூறி வருகிறார். லலலிதாவின் இந்த தகவல் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. <br /> <br />இதனிடையே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து கூறியதாவது: 1991-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தேன். அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நேரம். ஜெயலலிதா வீட்டில் இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டது. <br /> <br />ஜெயலலிதாவும் நானும்தான் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, மகள் இருப்பதாக ஒரு பிரசாரம் செய்யப்படுகிறதே என ஜெயலலிதாவிடம் கேட்டேன். <br /> <br />அதற்கு மிகவும் அதிகமாக கோபப்பட்டார் ஜெயலலிதா. இதெல்லாம் கருணாநிதியின் பொய் பிரசாரம் எனவும் கொந்தளித்தார். தற்போது ஒரு பெண் நீதிமன்றத்துக்கு மகள் என போயிருக்கிறார். <br /> <br />BJP Rajya Sabha MP Subramanian Swamy said that he will wait for the court decision on the Jayalalithaa's daughter row. <br />