ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நாளை முதல் நான்கு கட்டமாக பயிற்ச்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். <br /> <br />வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நான்கு கட்டமாக நடத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நாளை மற்றும் டிசம்பர் 8, 16, 20 ஆகிய தேதிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்றும் வகுப்பிகளில் தேர்தல் அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். <br /> <br />Des : District Election Commissioner said that training courses will be conducted for the staff members who will work at the RK Nagar seat by tomorrow <br />
