முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள், நான்தான், என்று பெங்களூரை சேர்ந்த பெண், அம்ருதா உச்சநீதிமன்றம் போனாலும் போனார், இந்த விவகாரம் பல்வேறு திருப்பங்களோடு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. <br />டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஹைகோர்ட்டில் வேண்டுமானால் முறையீடு செய்யுங்கள் என கூறியுள்ளது. <br />அம்ருதாவின் கோரிக்கைகளை முதலில் கேலியுடன் கடந்து சென்றனர் மக்கள். சொத்துக்காக ஆசைப்பட்டு இவ்வாறு வழக்குகள் போடப்படுவதாக கூறியோரே அதிகம். <br /> <br />ஆனால் இதற்கு நடுவே, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறிவரும் கருத்துக்கள்தான் பெரும் புயலை கிளப்பியுள்ளன. இதுவரை இல்லாமல் முதல் முறையாக, ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று லலிதா டிவி சேனல்களுக்கு பகிரங்க பேட்டியளித்து வருகிறார். <br />1980ல் சென்னையில் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், பேறு காலம் பார்த்தது தனது பெரியம்மா என்றும், குழந்தையின் தந்தை மறைந்த நடிகர் சோபன் பாபு எனவும், லலிதா கூறிய கருத்துக்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. <br /> <br />There are many questions are left un answered in Lalitha's claim who says Jayalalitha has daughter. <br />