ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிடக் கூடாது என பெங்களூரு சிறையில் சசிகலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் சசிகலாவை மீறி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என சபதம் போட்டுவிட்டு திரும்பியிருக்கிறாராம் தினகரன். <br />சசிகலா சிறைக்குப் போன பின்னர் அவரது சொந்தங்கள் அரசியலில் தலையெடுக்க மாட்டார்கள் என டெல்லி நினைத்தது. ஆனால் தினகரன் தடாலடி காட்டினார். <br />இதனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போக நேரிட்டது. சிறையில் இருந்து தினகரன் வந்த போது அதிமுக எடப்பாடியார் வசம் போனது.இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனாலும் தினகரன் சவுண்டு கொடுத்து வந்தது டெல்லியை கடுப்பேற்றியது. இதன்பின்னர் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே வருமான வரித்துறையில் சிக்கியது. <br />இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடுவேன் என தினகரன் அடம்பிடிக்கிறார். <br /> <br />ஆனால் நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதனால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்தார். அந்த சந்திப்பின் போதும் தினகரனை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றே சசிகலா சொல்லியிருக்கிறார். <br /> <br />Sasikala who was served jail term in Bengaluru also opposed to Dinakaran to contest in RK Nagar By Poll, sources said. <br /> <br />