Surprise Me!

கொலை மிரட்டல் எதிரொலி: ஜெ.-சோபன்பாபு மகள் என கூறிய அம்ருதா தலைமறைவு?- வீடியோ

2017-12-01 3 Dailymotion

ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகள் என உரிமை கோரிய அம்ருதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் தங்கை எனக் கூறிய பெங்களூரு ஷைலஜாவின் மகள் அம்ருதா. ஷைலஜா 2015-ம் ஆண்டு காலமானர். <br />ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரியம்மா ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கப் போவதாகவும் மாமா மகள் தீபாவுடன் கரம் கோர்த்துவிட்டதாகவும் அம்ருதா கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக தம்மை ஜெயலலிதா- சோபன் பாபு மகள் என உரிமை கோரி வருகிறார் அம்ருதா. <br /> <br />இது தொடர்பாக அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம். <br />இதனிடையே ஜெயலலிதாவின் உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் அனைவருமே சொல்லிவைத்தாற் போல, ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்தது பெண் குழந்தை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அம்ருதாவும் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களும் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. <br /> <br />Source said that, Amrutha who is claiming the daughter of Jayalalithaa has been receiving death threats. <br />

Buy Now on CodeCanyon