ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனுவை நிரகாரிக்க செய்ததற்கு பரபரப்பான பின்னணி காரணம் தெரியவந்துள்ளது. <br />விஷாலைப் பொறுத்தவரையில் தமிழ் நடிகராக இருந்தாலும், அவரை தெலுங்கு மொழி பேசுவோர் தங்களது மண்ணின் நடிகராகவே பார்க்கிறார்கள். <br />அவருக்கான மார்க்கெட் தமிழகத்தில் இல்லை, ஆந்திராவில் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. ஆந்திராவிலும் கூட விஷாலை தமிழ் நடிகராகப் பார்க்காமல், தங்களது பிரதிநிதியாகவே பார்க்கிறார்கள்.வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவு ஆதி ஆந்திரா சமூகத்தினர் வாக்காளர்களாக இருக்கின்றனர். <br /> <br />இவர்கள் காலம் காலமாக அதிமுகவின் பிரதான வாக்கு வங்கிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறார்கள். அதிமுக வேட்பாளராக நிற்கும் மதுசூதனனுக்கும் தாய்மொழி தெலுங்குதான். <br />குறிப்பாக 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாகவே ஆதி ஆந்திரா சமூகத்தினர் இருந்து வருகின்றனர். இந்த வாக்குகளை குறி வைத்துத்தான் விஷால் களம் இறங்கியிருக்கிறார். இதுதான் அதிமுக தரப்பை டென்ஷனாக்கியுள்ளது. <br /> <br />Here is the reasons of Vishal's nomination papers was rejected in the RK Nagar By Poll. <br />