Surprise Me!

திருப்பூர் பாட்டிக்கு 103-ஆவது ஹேப்பி பர்த்டே... 5 தலைமுறையினருடன் மகிழ்ச்சி கொண்டாட்டம்- வீடியோ

2017-12-07 1 Dailymotion

திருப்பூரைச் சேர்ந்த ராமாத்தாள் தனது பேரன், கொள்ளு, எள்ளு பேரன்கள் புடைச்சூழ 5 தலைமுறையினருடன் 103-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அந்த கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவர் ராமாத்தாளை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டு ஆணைப்பாளையம் கல்லூரி சாலையில் வசித்து வந்தார். ராமாத்தாளைவிட ராமசாமி 2 வயது இளையவர். இவர்களுக்கு 4 பெண்கள், 11 பேரப்பிள்ளைகள், 12 கொள்ளு பேர பிள்ளைகள், எள்ளு பேர பிள்ளைகள் என உள்ளதால் பாட்டி ராமாத்தாள் சுமார் 5 தலைமுறையினரை கண்டுள்ளார். ராமசாமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். <br /> <br />கணவர் இறந்தவுடன் பாட்டி ராமாத்தாள் தனது இரண்டாவது மகளின் வீட்டில் வசித்து வருகிறார். பாட்டிக்கு நேற்று 102 வயது முடிந்து 103-ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 42 பேர் பாட்டியின் சொந்தக்காரர்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் பாட்டி நினைவுகூர்ந்ததால் உறவினர்கள் அவரது நினைவுத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். <br /> <br />Ramathal, 103 years old lady in Tiruppur celebrated her birthday with 5 generations of her grand, great sons- daughters etc. At this age she has no complaint of diabetes, blood pressure etc. <br />

Buy Now on CodeCanyon