டோணி மட்டும் அப்படி பேட் செய்யாவிட்டால் இந்தியாவை ஒரு வழி செய்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் இலங்கை வீரர் சுரங்கா லக்மல் தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, இலங்கையில் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது. <br />அதிலும், வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு ஆரம்பம் முதல் ஷாக் கொடுத்தார். போட்டிக்கு பிறகு லக்மல் நிருபர்களிடம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். <br /> <br />சுரங்கா லக்மல் கூறியுள்ளதாவது: 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அப்போது நாங்கள் இந்தியாவை 40 ரன்னுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம் என்று கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது இலங்கைக்கு ஒரு சாதனையாக மாறியிருக்கும். <br /> <br />Suranga Lakmal, believes that his team could have bowled India out for their lowest total against Sri Lanka in the first ODI between the countries on Sunday.