இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் டெல்லி போலீசார் சேர்த்துள்ளனர். <br /> <br />இடைத்தரகர் சுகேஷ் உடன் டிடிவி தினகரன் பேசிய குரல் சோதனையில் இரண்டு குரல்களும் ஒத்துபோவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தினகரன் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. <br /> <br />தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடும் குடைச்சலை கொடுத்து வரும் தினகரனுக்கு மீண்டும் செக் வைத்துள்ளனர் டெல்லி போலீசார். <br />ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. <br /> <br />Delhi Police filed additional charge sheet in a special court against TTV Dhinakaran in connection with the Election Commission bribery case.