Surprise Me!

ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக மீண்டும் நிறுத்தப்பட வாய்ப்பு ?- வீடியோ

2017-12-16 4 Dailymotion

ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்துள்ளதால் அங்கு 3 மணி நேரமாக நடைபெற்று வரும் அசாதாரண சூழல்களால் இடைதேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. <br />ஜெயலலிதா மறைந்தவுடன் ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் தமிழக மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்தனர். <br /> <br />இந்நிலையில் ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி மீண்டும் இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனினும் இன்று பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. <br />பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸார் தவறாக கைது செய்துவிட்டதாகவும் அவர்களை விடுவிக்க கோரியும் ஆர் கே நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். <br /> <br />Again RK Nagar by election can be cancelled as the political party is planning to distribute Rs. 100 Crores. <br />

Buy Now on CodeCanyon