Surprise Me!

தினகரனின் கல கல பேட்டி- வீடியோ

2017-12-24 7 Dailymotion

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்.என். நம்பியாருக்கும், பி.எஸ். வீரப்பாவுக்கும் மக்கள் வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன இடையே கடும் போட்டி நிலவியது. ஒருவர் மாற்றி ஒருவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என பிரசாரம் செய்து வந்தனர். <br /> <br />இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். <br /> <br />இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். <br /> <br />எங்கள் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக என்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்துவிட்டனர். <br /> <br /> Dinakaran calls O.Panneer selvam and Edappadi Palanisamy as MN Nambiyar and Veerappa.

Buy Now on CodeCanyon