ஆண் போல வேடம்போட்டுக் கொண்டு 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி ஆந்திரா இளம்பெண் போலீசில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் புலிவேந்துலா மில் ஒன்றில் பணியாற்றிய நபர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை காட்டி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் செய்த உடனேயே வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார். <br /> <br />2 மாதங்களாகியும் அந்த நபர் திரும்பாததால் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. <br /> <br />இதையடுத்து அந்த நபரை சொந்த ஊருக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஒரு இளம்பெண் தெரியவந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இதேபோல் ஆண் வேடமிட்டு ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். <br /> <br />Andhra police arrested a teenage girl for married three women.