பஸ்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு இதுவரை 5 பேர் தற்காலிக பஸ் டிரைவர்கள் ஓட்டிய வாகனத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அரசுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. <br /> <br />ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு முதலே தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் குதித்தனர். <br /> <br />வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 60,000 பணியாளர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுக்க உள்ள 8 கோட்டங்களில் 15,000 தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளது அரசு. சுமார் 75 சதவீதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் தினமும் 65 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை போக்குவரத்து கழகங்கள் சந்திக்கின்றன. <br /> <br />இந்த ஸ்டிரைக் மூலம் போக்குவரத்து துறைக்கு ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரையிலலான நிலவரப்படி, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பஸ்கள் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். <br /> <br />With the transport corporations losing 65% of their revenue each day, the total loss has crossed the Rs 100-crore mark <br />