ரூ. 60 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள நடிகை மல்லிகா ஷெராவத்தை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. <br /> <br />பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிரில் ஆக்சன்பேன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரீஸில் வசித்து வருகிறார். அவர் பாரீஸில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். <br /> <br />பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அவர் வசித்து வருகிறார். <br /> <br />மல்லிகா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். முன்பணமாக ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளார். வீட்டின் மாத வாடகை ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். <br /> <br />வீட்டில் குடியேறுவதற்கு முன்பு கொடுத்த ரூ. 2 லட்சத்தோடு சரி. அதன் பிறகு மல்லிகா வாடகையே கொடுக்கவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றேன் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். <br /> <br />தங்களுக்கு பண பிரச்சனை இருப்பதாக நீதிமன்றத்தில் மல்லிகா, சிரில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மல்லிகா, சிரிலை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. <br /> <br /> <br />A court in Paris has ordered to evict actress Mallika Sherawat and her husband from their posh apartment after they failed to pay rent for a year starting from last january.