Surprise Me!

நாணய உற்பத்தியை நிறுத்த ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு- வீடியோ

2018-01-11 1,972 Dailymotion

ஏற்கனவே தயாரித்துள்ள நாணயங்களை வைக்க இடமில்லை என்பதால் புதிதாக நாணயங்களை தயாரிக்க வேண்டாம் என ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. கொல்கத்தா, மும்பை, நொய்டா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஆலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நாணயங்களை தயாரித்து வருகின்றன. <br /> <br />இந்நிலையில் ஏற்கனவே தயாரித்த நாணயங்கள் ஆலைகளில் உள்ள அறைகளில் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிய நாணயங்களை தயாரித்தால் அவற்றை வைக்க இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. <br />இதன்காரணமாக புதிதாக நாணயங்களை தயாரிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br />வழக்கமான பணி நேரத்தில் ஆலை ஊழியர்கள் பணி செய்தால் போதும் என்றும் ஓவர்டைம் பார்க்க வேண்டாம் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. <br /> <br />The four government mints in Kolkata, Mumbai, Noida and Hyderabad have stopped production of coins as lack of storage space. <br />

Buy Now on CodeCanyon