தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்றவே முடியாது என 71% பேர் கருத்து தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலூன்றுவதற்கு பாஜக படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை கைப்பற்றி அதன் மூலம் காலூன்றவும் பாஜக முயற்சிக்கிறது. <br />ஆனால் அதிமுக- பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய அலை தமிழகத்தில் இருக்கிறது. இதன் முதல் கட்ட ரிசல்ட்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு எனலாம். <br /> <br />பாஜகவின் தொடர்ச்சியான தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டினால் மக்கள் அதனை நிராகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் தாம் அரசியலில் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என தினகரனால் அடித்து சொல்ல முடிகிறது. <br />இந்நிலையில் தமிழகத்தில் 77 சட்டசபை தொகுதிகளில் 4578 பேரிடம் இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது. இதில் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br />ரஜினிகாந்த் கட்சியால் 33 இடங்களைக் கைப்பற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினியால் தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப முடியாது எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். <br /> <br />According to the India Today Opinion Poll BJP would not inroads in TamilNadu. <br />