ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் கிளப்பியுள்ளார். மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா சகோதரன் திவாகரன் கூறுகையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒரு நாள் தாமதமாக வெளியிட்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஜெயக்குமார் மறுத்தார். <br /> <br />இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி எனக்கு அவரது இறப்பு செய்தி வந்துவிட்டது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் போன் செய்தார். <br /> <br />அப்போது முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செயலாளர் பூங்குன்றனுக்கு போன் செய்தால் அவரும் எடுக்கவில்லை. <br /> <br />Minster Rajendra Balaji says that Jayalalitha died on Dec 4 at 5.20 pm. I got these details from the hospital on the day itself. <br />