பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாமல், திமுகவை குறை சொல்வது 6 ஆண்டுகளாக அதிமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். <br /> <br />பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் 500-க்கும் அதிகமான திமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டு அருகே இருந்த திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். <br />சோழவந்தான் பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், அப்பகுதியில் தங்கி இருந்தார். திமுகவினர் கைது செய்யப்பட்டதை அறிந்து நேற்று வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் கைதான திமுகவினரை மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியுடன் சென்று சந்தித்தார். <br />நான் அரசியலுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. அரசியல் களம் எனக்கு புதிதல்ல. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் திமுகவை காரணம் காட்டுகின்றனர். இது கடந்த 6 ஆண்டுகளாக அதிமுக அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுவதாக உள்ளது. வரும் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக சார்பில் நடைபெறும் போராட்டங்களில் நான் பங்கேற்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். <br /> <br />udhayanidhi stalin met dmk cadre in madurai <br />