Surprise Me!

அதிமுக எம்.எல்.ஏ வை அறைந்த வாலிபர் மர்ம சாவு

2018-01-31 7,656 Dailymotion

அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார். <br /> <br />திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா மணி என்கிற மணிகண்டன். கடந்த 20ம் தேதி அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்றார். <br /> <br />அப்போது பன்னீர்செல்வத்தின் காலில் விழுவதை போல சென்ற வசந்தா மணி, திடீரென அவரை அறைந்தார். <br /> <br />இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எம்எல்ஏவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் வசந்தா மணி. எம்எல்ஏ தன்னை பதிலுக்கு தாக்கியதாக வசந்தாமணி தரப்பும் புகுார் கொடுத்திருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட, 4 நாட்களில் திடீரென வசந்தாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டு, கடந்த 24ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். <br /> <br />வசந்தாமணிக்கு, மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்பிறகு, மருத்துவமனையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார் வசந்தா மணி. ஆனால், இன்று காலை திடீரென அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் <br /> <br />Vasanthamani an youth who was attack AIADMK MLA Panneerselvam died after admitted in a gvt hospital in Vellore.

Buy Now on CodeCanyon