Surprise Me!

சந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி!- வீடியோ

2018-02-07 2 Dailymotion

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு எதிராக செயல்படத் தொடங்கி தர்மயுத்தம் அறிவித்ததால் கடந்த ஆண்டு கோபத்தின் உச்சிக்கே போனார் சசிகலா. இதன் வெளிப்பாடாக நள்ளிரவில் போயஸ் கார்டனில் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரின் கன்னிப் பேட்டி சசிகலாவின் சுயரூபம் என்ன என்பதை அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக்கியது. தனக்கு எதிராக ஒருவர் எப்படி செயல்படலாம் என்ற கோபம், ஆக்ரோஷம் சசிகலாவின் அந்த பேட்டியில் வெளிப்பட்டது. பிப்ரவரி 7,2017 அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே யாராலும் மறக்க முடியாத நாள். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு முடிவில் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்து, சசிகலாவிற்கு எதிரான அணுகுண்டை வீசினார். <br />வேண்டாம் என்று சொன்ன போதும் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு என்னை அவமானப்படுத்தி வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டார்கள் என்று வெடித்தார். கட்சி, ஆட்சியில் மக்களால் விரும்பும் ஒருவர் தான் இருக்க வேண்டும் எனவே கட்சி, ஆட்சியை மீட்க தனி ஒருவனாக போராடத் தயாராகி விட்டேன் என்றார். <br /> <br />அதிமுகவில் ஜெயலலிதாவிற்குப் பிறகு தாங்கள் தான் எல்லாம் என்று எண்ணிய சசிகலா குடும்பத்தின் எண்ணத்தில் விழுந்த முதல் இடி ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த தியானம். அண்ணன் செத்த திண்ணை காலியானதும் அது தனக்குத்தான் என்று எண்ணிக் காத்திருந்த சசிகலாவின் ஆசையிலும் மண் விழுந்தது. <br /> <br /> <br />Sasikala revvvealed her real face to media on February 7, 2017 through her first midnight interview that DMK is supporting O. Paneerselvam. Here is the recall. <br />

Buy Now on CodeCanyon