மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி .ராமகிருஷ்ணன், சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசினார்.<br /><br />சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், கடந்த மாதம் 16-ம் தேதி, காய்கறி வியாபாரிகளிடம் அத்துமீறி நடந்த காவல்துறையினரிடம் ஏன் இவ்வாறு நடக்கறீர்கள் என்று கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமியைத் தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர்கள் ராஜா,முத்துப்பாண்டி, நந்தகுமார், உள்ளிட்ட ஐந்துபேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும், அத்துடன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மார்ச் 2-வது வாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம்.என கூறியிருக்கிறார். <br />கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பல்கைலக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டாம் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியதற்கு தமிழக அரசு கண்டிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.<br /><br />g ramakrishnan press meet in sivagangai on cauvery issue and etc.,<br />
