வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை. <br /> <br />ஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார். <br /> <br />மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். <br /> <br />பிடிபட்ட மணல் லாரியை விடுவிக்க லஞ்சப் பணத்துடன் பொங்கல் போனஸையும் சேர்த்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஆம்பூர் டிஎஸ்பியும், உதவி ஆய்வாளர் ஒருவரும் கையும் களவுமாக சிக்கினர். <br /> <br />வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை. <br /> <br />ஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார். <br /> <br />மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். <br /> <br /> DSP demands bribe for sand mining, arrested <br />