ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சியில் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். <br />ஸ்ரீதேவி சொல்வா சாவன்(1979) படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனாலும் ஜிதேந்திராவுடன் சேர்ந்து நடித்த ஹிம்மத்வாலா(1983) படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. <br />ஹிம்மத்வாலா படத்தில் ரேகா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டி இருந்தது. அவர் நடிக்க முடியாமல் போக ஸ்ரீதேவி நடித்தார். அந்த படம் மூலம் தான் எனக்கும், ஸ்ரீதேவிக்கும் நல்ல பெயரும், புகழும் கிடைத்தது என்பது அனைவருக்குமே தெரியும். <br />ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். ஹிம்மத்வாலா படத்திற்கு பிறகே ஸ்ரீதேவியின் மேஜிக்கை பாலிவுட் கண்டுகொண்டது. ஹிம்மத்வாலா ரிலீஸாகி பிப்ரவரி 25ம் தேதியுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த கொண்டாட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு ஸ்ரீதேவி இறந்துவிட்டார். <br />ஸ்ரீதேவி நடித்த தமிழ் படம் ஒன்றின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தான் நான் அவரை முதலில் சந்தித்தேன். பெரிய அழகிய கண்களுடைய அவரை பாராட்டினேன். <br /> <br /> <br />Bollywood actor Jeetendra said in an interview that the legendary actress passed away one day before the 35th anniversary of their superhit movie Himmatwala.