தனது பிறந்தநாள் அன்று ஜான்வி கபூர் தனது தாயை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். <br /> <br />துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். தாயை இழந்து ஜான்வி கபூரும், குஷி கபூரும் கவலையில் உள்ளனர். தாய் இல்லாமல் முதல் பிறந்தநாள் கொண்டாடினார் ஜான்வி. <br />தனது பிறந்தநாள் அன்று அவர் இன்ஸ்டாகிராமில் அம்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, <br /> <br />நானும், குஷியும் எங்கள் தாயை இழந்துவிட்டோம். ஆனால் எங்கள் அப்பா தனது வாழ்க்கையையே இழந்துவிட்டார். என் தாய்க்கு அன்பு தான் முக்கியம். அவருக்கு வெறுப்பு, பொறாமை எதுவும் தெரியாது. நாமும் அது போன்று இருப்போமாக. <br /> <br />நாம் அன்பாக இருப்பதை பார்த்து என் தாய் மகிழ்ச்சி அடைவார். கடந்த சில நாட்களாக நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அது எங்களுக்கு நம்பிக்கை, தெம்பு அளித்துள்ளது. அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. <br /> <br />நீங்கள் சென்ற பிறகு மனதில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது போகாது என்பது தெரியும். கண்களை மூடினால் உங்களை பற்றிய நல்ல விஷயங்களே நினைவுக்கு வருகின்றது. நீங்கள் மிகவும் அன்பானவர், அதனால் தான் கடவுள் உங்களை அழைத்துக் கொண்டார். <br /> <br />Sridevi's sudden death has shaken up the entire nation. The actress passed away, on February 24, 2018. Her daughter Janhvi Kapoor has paid a heartbreaking tribute to her mother in an open letter. <br /> <br />