Surprise Me!

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் உதைக்கப்பட்ட பெண் கர்ப்பிணி இல்லை- வீடியோ

2018-03-13 1 Dailymotion

<br />திருச்சியில் காவல் துறை ஆய்வாளரால் எட்டி உதைத்து கொல்லப்பட்ட உஷா கர்ப்பிணி இல்லை என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் கடந்த 7-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். <br /> <br />போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். <br /> <br />பின்னால் வந்த வேன் ஏறியதில்உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். உஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று ராஜா தெரிவித்தார். கர்ப்பிணியை எட்டி உதைத்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். <br /> <br /> <br /> Trichy Usha who dis when a SI kicks of the two wheeler she travels. Sources says that She was pregnant for 3 months. But her postmorem report says that she was not pregnant.

Buy Now on CodeCanyon