தனது மகளுக்கு சிக்கன், பர்கர், பீட்சா ஆகிய உணவுகளை வாங்கிக் கொடுத்ததே இல்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். <br />மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட் சென்றாலே கொஞ்சம் பகீர் என்கிறது. பிள்ளைகள் ஆசையாக கேட்கும் பொருட்களை பார்க்கும்போது விஷத்தை பார்ப்பது போன்ற பயம் வருகிறது. <br />அப்போது சிவகார்த்தியேகன் பேசிய வசனம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. <br />சிவகாரத்திகேயன் படத்திற்காக வெறும் வாய்ச்சவுடால் விடும் ஆள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். அவர் தனது மகள் ஆராத்யாவுக்கு சிக்கன், பர்கர், பீட்சா, கூல்ட்ரிங்க்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததே இல்லையாம். இதை அவரே தெரிவித்துள்ளார். <br />விவசாயத்திற்கு ஆதரவாக நடிகர் ஆரி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் எதிர்காலத்தில் விவசாயியாக ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். <br /> <br />Sivakarthikeyan said that he has not given pizza, burger, cool drinks to his four-year-old daughter Aradhya. He doesn't want to act in advertisements asking others to buy things that he won't give his daughter.