பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு முதலாவது அக்னி பரீட்சையாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இன்று எதிர்கொள்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுடன் தெலுங்குதேசம் கட்சி மல்லுக்கட்டி வருகிறது. இதனால் பாஜக- தெலுங்குதேசம் உறவும் விரிசலடைந்தது. ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங் எம்பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகின்றனர். <br /> <br /> <br />YSR Congress has Nine and TDP 16 MPs in the Lok Sabha, A no-confidence motion requires the support of 50 MPs. If no-confidence motion accepted, it is to be defeated.