மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்கச் சிவந்த வானம்' மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். <br />தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. <br />'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சிம்பு இன்ஜினியராகவும் நடிக்கிறார்களாம். 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் முகம் காட்டிய அருண் விஜய் இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். <br />இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா, ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக நடிக்கிறாராம். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுத்த '36 வயதினிலே' படம் குடும்பத்தலைவி ஒருவர் தனக்குத் தடையாக இருக்கும் எண்ணங்களையெல்லாம் உடைத்து சமூகத்தில் முன்னேறும் கதையில் எடுக்கப்பட்டது. <br />பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து 'மகளிர்' மட்டும் படத்திலும் பெண் சுதந்திரம் தொடர்பான கேரக்டர் தான். அடுத்து பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் போலீஸாக நடித்தார் ஜோதிகா. <br />'செக்கச் சிவந்த வானம்' படத்திலும் ஆணாதிக்கத்திற்கு எதிராகச் செயல்படும் பெண் கேரக்டர். ஜோதிகாவுக்கு வரிசையாக இதேபோன்ற கேரக்டர்கள் தான் அமைந்துகொண்டிருக்கின்றன. பெண்ணீயப் போராளி கேரக்டர் என்றாலே ஜோதிகா நினைவு வரும் அளவுக்கு உருவாக்கி விடுவார்களோ? <br /> <br /> <br />Actress Jyothika is acting as a woman against the patriarch in Maniratnam's 'Chekka Sivantha vaanam'.