பாலிவுட் நடிகர் சல்மான் கானை கடந்த 19 வருடங்களாகச் சுற்றி வரும் மான் வேட்டையாடிய வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானை குற்றவாளி என அறித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். <br />கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது, வனப் பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சயீப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. <br />குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது. <br />சல்மான் கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கெனவே ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. <br />அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், தொடர்புடைய நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர். நடிகர் சல்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. <br />மேலும், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சல்மான் கான் விரைவில் ஜெயிலில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது. <br /> <br /> <br />Jodhpur court convicted bollywood actor Salman in deer poaching case. Salman has been sentenced to five years imprisonment and a penalty of Rs 10,000. <br />