கலர்ஸ் டிவி-யின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் தேடி வருகிறார் நடிகர் ஆர்யா. <br />16 இளம்பெண்கள் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. <br />இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் படி தற்போது மீதமிருக்கும் மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. <br />கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் இதுவரை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தற்போது சென்னை திரும்பி, ஒவ்வொரு போட்டியாளரின் வீட்டுக்கும் சென்று ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். <br />தனக்கு மணப்பெண்ணாக வரவிரும்பும் போட்டியாளர்களின் வீடுகளுக்குச் சென்று வருகிறார் ஆர்யா. பெண் பார்க்கும் வைபவம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் அபர்ணாதி வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்றபோது ஷூட்டிங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்ணிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. <br />இந்த நிகழ்ச்சியில் இறுதியில் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த மூவர் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேரில் ஒருவரைத் தான் ஆர்யா இறுதியாக தேர்வு செய்யவிருக்கிறார். <br />சுசானா கனடாவைச் சேர்ந்தவர். அகதா கனவுலகில் வாழ்வதைப் போலவே பேசும் பெண். சீதாலக்ஷ்மி ஆர்யாவை நிலவுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டே இருப்பார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அபர்ணாதி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். <br /> <br /> <br />Actor Arya is looking for a bride to get married by Colors TV's 'Enga veettu mappillai' program. According to the shooting of the show, only three contestants are remaining. <br /> <br />#arya #engaveetumappillai