காவிரிக்காக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை எள்ளி நகையாடும் தமிழக பாஜக தலைவர்களின் செயல் சரியானது அல்ல என்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார். <br /> <br />
