Surprise Me!

டூப்ளசிடம் மன்னிப்பு கேட்ட சினிமா பிரபலம்- வீடியோ

2018-04-11 2,506 Dailymotion

ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். <br />காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் போராடி வரும் நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. <br />சோறா, ஸ்கோரா என்று கேட்டு போராடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தது. <br />சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது. <br />மைதானத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது சிலர் தங்களின் காலணிகளை கழற்றி மைதானத்தில் வீசினார்கள். <br />மைதானத்திற்குள் விழுந்த ஷூ ஒன்றை சிஎஸ்கே வீரர் டூப்ளசி எடுத்து வந்து ஓரமாக போட்டார். கையில் ஷூவை எடுத்த பிறகு அவர் பார்வையாளர்களை பார்த்து என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா என்பது போன்று பாவமாக ஒரு பார்வை பார்த்தார். <br />விருந்தோம்பல் - தமிழனின் தலையாய பண்பாடு! இதை செய்தவன் - தமிழினத்தில் ஒரு வேறுபாடு! புரியும்படி சொல்லனும்ணா - அவன் வேற ஏதோ ஒரு ப*டு! மன்னிப்புக்கள் @faf1307 #CSKvKKR என்று ட்வீட்டியுள்ளார் ரூபன். <br /> <br />Editor Reuben was angry after seeing tamils hurling shoe in the ground when CSK and KKR players were playing in the yesterday's IPL match held in Chennai. <br />

Buy Now on CodeCanyon