கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் நேற்று முதல் <br />திரையிடப்பட்டு வருகிறது. சைலன்ட் த்ரில்லர் படமான 'மெர்க்குரி' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று <br /> <br />வருகிறது. மூடப்பட்ட மெர்க்குரி தொழிற்சாலையின் பின்னணியில் வைத்துப் பேசப்படும் இந்தக் கதையில் <br /> <br />கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் மக்களுக்கு எப்படி பாதிப்புகளை விளைவிக்கிறது என வசனம் <br /> <br />இல்லாமல் விளக்கப்பட்டிருக்கிறது. <br /> <br />மெர்க்குரி ஆலைக் கழிவுகளால் கொடைக்கானல் பகுதி மக்களுக்கும், நிலத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டதை <br /> <br />அந்தப் பகுதி மக்களே அறியாத அவலமும் நம் தமிழகத்தில் நடந்தேறியது. அந்தளவுக்குத் தான் வேதிப் <br /> <br />பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் திட்டம், <br /> <br />கூடங்குளம் அணுமின் திட்டம், டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் <br /> <br />திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் என தமிழகத்தில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வேதிப் <br /> <br />பொருட்கள் தொடர்பான திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மக்கள் சமீபமாகத்தான் <br /> <br />கிளர்த்தெழத் தொடங்கியிருக்கிறார்கள். கார்ப்பரேட் அரசியலை மையமாக வைத்து, செயல்படாத மெர்க்குரி <br /> <br />ஆலையின் பின்னணியில், அந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி கதையை நகர்த்தி <br /> <br />இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த மெர்க்குரி ஆலைக்குப் பெயரே கார்ப்பரேட் எர்த் என்பது தான். <br /> <br /> <br /> <br />Karthik Subbaraj's 'Mercury' movie is being received by fans. The story, which focuses on the corporate politics and the backdrop of the closed Mercury factory. <br /> <br />