கேரளாவில் டிவி சீரியல் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. <br />கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கவிதா(35). மலையாள டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். திருமணமான அவருக்கு 4 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். <br />கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். <br />கவிதா தனது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக இருந்துள்ளார். <br />கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் துவங்க வேண்டும் என்று ஆசையாம். அதற்காக பணம் சேர்த்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. <br />பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்புறமாக பூட்டியிருந்த வீட்டில் கவிதா கை பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. <br />கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இது தற்கொலையா இல்லை கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். <br /> <br />Kavitha, a 35-year-old TV serial actress was found dead at her house in Kerala. She was burnt to death. Police have filed a case about this and are investigating the same. <br /> <br />#kerela #serial actress #dead
