விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான <br /> <br />கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை <br /> <br />உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. <br /> <br />நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை <br /> <br />உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த <br /> <br />நீதிபதி படத்திற்கு தடை விதிக்கமுடியாது என உத்தரவிட்டுள்ளார். <br />இரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக <br /> <br />பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காட்சிகளுடன் படம் <br /> <br />வெளியானால், ஆதார் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவே அந்தக் <br /> <br />காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என நடராஜன் மனு <br /> <br />அளித்திருந்தார். <br /> <br /> <br /> <br />HC clear on Irumbuthirai release. Judge says, "We can't ban the film <br /> <br />'Irumbuthirai' which got censor approval." <br /> <br />