முதல்வரின் பேச்சுக்கு பதில் கூற துணிச்சல் இல்லததால் சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். <br /> <br />ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா பா பாண்டியராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்ட சபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது, உண்மைகளை எதிர்கொள்ள திரணி இல்லாமலும் முதல்வர் பதவி விலக வேண்டும் போன்ற காரணங்களை திமுகவினர் கூறியுள்ளனர் என்றார். தூத்துக்குடி உயிரிழப்பு சம்பவத்திற்கு தார்மீக காரணம் திமுக என்றும் காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் கிடைத்துள்ள வெற்றியை எதிர்கட்சிகளால் பொருத்து கொள்ள முடிய வில்லை என்றார். ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை வரலா மட்டுமே இருக்கும் என்றும் எதிர்காலம் என்பது கிடையாது என்றார். <br /> <br />des : Minister Mambai Pandiyarajan said DMK walked out of the Assembly due to lack of courage to answer the chief minister's speech
