மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடியே திரும்பி போ என முழக்கமிட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த நிலையில் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் அது குறித்து நடவடிக்கை எடுக்காததால் கடந்த 100 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.<br />
