Thirumavalavan said that the DMK's model was a form of protest law. <br /> <br />திமுக நடத்திய மாதிரி சட்டபேரவை போராட்ட வடிவம் என்றும் அதனை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்தார். <br /> <br />திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடு முழுவதும் நடைபெற்றுள்ள இடைத்தேர்தலில் பாஜவிற்கு தோல்வி ஏற்பட்டுள்ளது பாஜக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதின் விளைவு என்றார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி காந்த் கூறியுள்ளார். சமூக விரோதிகள் யார் ஊடுருவியுள்ளார்கள் என்பது ரஜினிக்கு தெரியும் என்றால் அவர்களின் விபரத்தை காவல்துறையினரிடம் ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என்று கூறினார். சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சணைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வெளியேறியுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்று நடத்தப்பட்ட மாதிரி சட்டபேரவை போராட்டத்தின் வடிவம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
