சமூக வளைதளங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். <br /> <br />வேலூர் மாவட்டம் ரவுத்தம்பட்டியை சேர்ந்தவர் யாதவமூர்த்தி. கூலித்தொழிலாளியான இவர் திருப்பத்தூரில் குழந்தைகளை கடத்துவதற்காக 400 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளதாகவும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பேஸ்புக் வாட்ஸ்அப்களில் செய்திகளை வெளியிட்டுள்ளார். யாதவமூர்த்தியின் வளைதலத்தை போலீசார் சோதனை செய்ததுடன் தொடர்ந்து வதந்தி செய்திகளை பரப்பியதால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பேஸ்புக் வாட்ஸ்அப்களில் வெளியான தவறான செய்திகளால் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூகவளைதலங்களில் வதந்திகளை பரப்பியவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
