Uttarakhand gives balloon-based internet with high speed to its people for free. <br /> <br />உத்தரகாண்டில் எல்லா இடங்களையும் இணைக்கும் வகையில் பலூன் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இதற்காக ஹீலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. டேராடூன் ஐடி பார்க்கில், நேற்று அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுக்க இண்டெர்நெட் மூலம் இணைக்க பலூனை பயன்படுத்துவது இதுவே முதல்முறை. கூகுள் இயற்கை பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில், இண்டெர்நெட் வழங்க இந்த முறையை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.