Surprise Me!

அடமான நகைகளுடன் மாயமான வட மாநிலத்தவர்- வீடியோ

2018-07-07 16,731 Dailymotion

அடமானம் பெற்ற நகைகளுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மாயமாகிவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். <br /> <br />கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவரும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலரும் நேற்று மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமாரிடம் புகார் கொடுத்தனர். புகாரில் குருபரப்பள்ளி நகை அடமானம் வைத்து பணம் கொடுக்கும் வட மாநிலத்தை சோனாராம் என்பவரிடம் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக சென்ற போது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும் தங்களை போன்று குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தில் பலரை அவர் ஏமாற்றி உள்ளார். எனவே அவரை கண்டுபிடித்து, எங்களின் நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ் பி புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon